அரிசி விலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் !
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோவின் விலை 120 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 110 ரூபாவாகவும், வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோவின் விலை கிலோ 98 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாட்டரிசி ஒரு மெட்ரிக் தொன்னின் விலை ஒன்றின் விலை 400 டொலராக குறைவடைந்துள்ளதாகவும் , சிவப்பு பச்சை அரிசி ஒரு மெட்ரிக் தொன்னின் விலை 390 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள இறக்குமதியாளர்கள் இந்தியாவில் அரிசி விலை ஏற்பட்டுள்ள மாற்றமே இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனறும் சுட்டிக்காட்டியுள்ளனா்.
அரிசி இறக்குமதி தொடரும் என்றும், போதிய அளவு கையிருப்பு களஞ்சியத்தில் இருப்பதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.