May 22, 2013  01:49:AM

வித்யா பாலனுக்கு தேசிய விருதுகள்

வித்யா பாலனுக்கு தேசிய விருதுகள்

March 7, 2012  03:12 pm

Bookmark and Share

59 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. வெற்றிபெற்றவர்களுக்கு மே 3 ம் திகதி இந்த விருதுகள் வழங்கப்படும். சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான டர்ட்டி பிச்சர்ஸிசில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.


 

தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்கியவர் சர்குணம். இவரது முதல் படம் களவாணி. வாகை சூட வா இவரது இரண்டாவது படமாக அமைந்தது. இந்த படத்தின் நாயகனாக விமல் நடித்தார். படத்தின் நாயகியாக இனியா அறிமுகமானார்.


அடுத்த தலைமுறைக்கு கல்வி அவசியம் என்பது இப்படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


 

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இந்தி படத்திற்கான விருதிற்கு ஐ ஆம் என்ற படம் தேர்வு பெற்றது.  சிறந்த நடிகைக்கான விருதை தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடிக்த வித்யாபாலன் பெறுகிறார். சிறந்த நடிகருக்கான விருதை மராத்தி படமான தியோலில் நடித்த கிரிஸ் குல்கர்னி பெறுகிறார்.


 

தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்திற்கும் கிடைத்திருக்கிறது. மேலும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கி‌டைத்திருக்கிறது.


உங்கள் கருத்து


Post your blog entry

இந்த செய்தியை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

பெறுபவர்  உங்கள் பெயர் 
Most Viewed
Copyright © 2011 Thamilan. All rights reserved.