
புதுமைகள் மூலம் சமூகங்களை இணைக்கும் மைக்ரோசொப்ட்
March 7, 2012 09:10 am
தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தும் ஸ்ரீலங்கா
மைக்ரோசொப்ட் நிறுவனம் ´Connecting
Communities’ திட்டம் மூலம் மக்களுடன்
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் தமது இரண்டாவது அமர்வை கொழும்பு தாஜ் சமுத்திரா
ஹோட்டலில் பெப்ரவரி 29 ஆம் திகதி
நடத்தியது.
மென்பொருள் முன்னோடியான மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்திருந்த
இச்செயலமர்வின் மூலம்; சமூக பொறுப்பு
வாய்ந்த சமூக சேவை நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதாரண
சமூகத்தை சென்றடைவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மைக்ரோசொப்ட் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை அறிந்து அதன்மூலம் நிறுவனங்கள்
தமது இலக்குகளை அடைவதை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட ஒருநாள் செயலமர்வில்
தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி திறன்களை அதிகரிப்பதை நோக்கமாக
கொண்டிருந்தது.
வர்த்தக உலகின் முன்னிலை வகிக்கும் Microsoft
Lync எனப்படும் உயர் பயன்பாட்டு கருவியும் இதன்போது
பங்கேற்றவர்களுக்கு மைக்ரோசொப்ட் தொழில்நுட்ப வல்லுனர்களால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தகைய புதிய செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்துவதன்மூலம் சமூகத்துக்கு விசேட
சேவைகளை வழங்க தமது நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மைக்ரோசொப்ட் ஆசிய வலய
செயற்றிட்ட முகாமையாளர் லோரா பெல் தெரிவித்தார்.
இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA )செயற்றிட்ட பணிப்பாளர் வசந்த ரத்னபிரிய பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் சிறப்புரை நிகழ்த்தினார்.
உங்கள் கருத்து
- > மனைவியின் இடுப்பில் பூட்டை மாட்டிய கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை
- > கொக்க-கோலா தயாரிப்பு இரகசியத்தை வெளியிடப் போவதாக மிரட்டல்
- > ரயிலை நிறுத்த முன் இறங்க முற்பட்டவர் பரிதாபமாக பலி
- > அமெரிக்காவில் இரு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
- > யுத்த வெற்றி விழாவில் படகு மூழ்கி ஒருவரை காணவில்லை
- > கேன்ஸ் திரைப்பட விழாவில் நகைகள் கொள்ளை!
- > செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது
- > முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
- > ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு புதுக்கோட்டையில் அஞ்சலி
- > யுத்தத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி













