
நீதானம்மா...!
March 7, 2012 08:59 am
கருவினிலே பத்து மாதங்கள்
எனை சுமந்து
இவ்வுலகை நான் பார்க்க
உயிரோடு போராடியவள் நீதானம்மா
உதிரத்தை பாலாக்கி
அதை உவகையுடன் எனக்கு ஊட்டி
உன் பிள்ளை நான்
உறங்க மடியினை
மெத்தையாக்கியவள் நீதானம்மா
கண் விழித்திருந்து
பல இரவுகள்
கண் போல் எனை பாதுகாத்து
உறக்கமது நீ இழந்து அதில்
உள்ளம் மகிழ்ந்து
கொண்டவள் நீதானம்மா
அன்போடு அரவணைத்து
அடக்கத்தை பயிற்றுவித்து
ஒழுக்கத்தோடு சேர்ந்து
உலக விழுமியங்களை
கற்றுத் தந்தவள் நீதானம்மா
குற்றங்கள் செய்யும் போது
குறும்பாய் எனை கண்டித்து
புத்திமதிகள் கூறி புதிய
பாதையும் அமைத்து
தந்தவள் நீதானம்மா
ஆயிரம் உறவுகள் இருந்த போதும்
ஆசி கூறி எனை வாழ்த்தும்
இறைவன் எனக்கருளிய
இணையில்லாத தெய்வம் நீதானம்மா
சோதனைகள் மட்டுமல்ல
பல பல வேதனைகளோடும்
எனை வாழ வைத்த
தெய்வம் நீதானம்மா
உனது அன்பு கடன்
தீர்க்க என் வாழ்வே
போதாது தாயே,,,!
சிந்து
உங்கள் கருத்து
- > யாழ். காரைநகரில் முதல் முறையாக அஸ்வமேத மஹாயாகம்
- > பூமியை நெருங்கும் 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல்
- > கடல் நீரில் இருந்து யுரேனியம் எடுக்கலாம்
- > கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு வேண்டுமாம்!
- > 1400 கோடி ஊழல் - மாயாவதி மீது நடவடிக்கை
- > ஈழ தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவி என்ன?
- > இந்த அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை!













