May 20, 2013  05:04:AM

ஆயர் ராயப்பு ஜோசப்பை உடன் நீதிமன்றில் நிறுத்துக - ஜாதிக ஹெல உறுமய

ஆயர் ராயப்பு ஜோசப்பை உடன் நீதிமன்றில் நிறுத்துக - ஜாதிக ஹெல உறுமய

March 6, 2012  08:12 pm

Bookmark and Share
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருப்பதானது, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.

அதனால் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
 
ஆயர் ராயப்பு ஜோசப் கடந்த 30 வருடங்களாக புலிகளின் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்துள்ளார். 

அவர் நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளாத அரசியல் நிலைப்பாட்டிற்கு குரல் கொடுத்து வருபவர்.

இதனால் புலிகளுக்கு ஆதரவான இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
 
இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க கூடாது என ஆயர்கள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் போது, மன்னார் ஆயர் அதற்கு முரணாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஆயர்கள் சபையின் நிலைப்பாடு என்ன என்பதை பேராயர் மெல்கம் ரஞ்சித் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் கருத்து


Post your blog entry

இந்த செய்தியை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

பெறுபவர்  உங்கள் பெயர் 
Most Viewed
Copyright © 2011 Thamilan. All rights reserved.