
இதுவரை உணர்ந்ததில்லை
March 6, 2012 09:25 am
இருள் சுழ்ந்த
இரவு என்
இதயத்தில் சிறு கனவு
கனவென்று தெரிந்திருந்தும்
கண்கள் அதையே விரும்புவதும்
தூரத்திலிருந்து
ரசிப்பதும்
துரத்தித் துரத்தி வருவதும்
தூக்கத்திலிருந்து விழிப்பதும்
தூக்கமின்றி தவிப்பதும்
கண்ணாடி முன்னால்
நிற்க
காட்டுது உன் முகத்தை
கதைப்பவர் குரலெல்லாம்
கேட்குது உன் குரலாய்
கூட்டத்தில்
இருந்தும்
தனிமையை உணர்கிறேன்
தனிமையாய் இருந்தாலும்
இனிமையை உணர்கிறேன்
கண்கள் இமைக்க
மறக்குது
உதடுகள் உச்சரிக்க மறுக்குது
பக்கத்தில் நீயிருக்க
படபடக்குது என் இதயம்
இதுவரை
உணர்ந்ததில்லை
இப்படி ஒருபோதும்
இப்போ உணர்கிறேன் என்
இதயத்தில் இருப்பது நீயென்று
-வினோஜா-
உங்கள் கருத்து
- > பர்மா மதக் கலவரம் - முஸ்லிம்கள் ஏழு பேருக்கு தண்டனை
- > நான்கு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன போல்ட் புறா
- > பொது மன்னிப்பு காலத்தின் உச்ச நன்மைகளைப்பெற வேண்டும்
- > எழுந்து நடந்தார் இம்ரான் கான்
- > பிரீத்தி ஜிந்தா அரசியலில் குதிக்கிறார்?
- > 20 மணிநேரம் வரை மின்தடையால் தவிக்கும் மக்கள்!
- > இந்தியாவிலேயே முதல்முறை 7 பரிமாண தியேட்டர்!
- > தாங்கமுடியவில்லை
- > எதிர்பார்க்கின்றேன் உன்னை...
- > ஏ(ன்) மாற்றம்...













