வெள்ளவத்தை விபத்தின் CCTV காணொளி வெளியானது
வெள்ளவத்தையில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் வாகனமொன்று வெள்ளவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதிவிட்டு, வேகமாக தப்பிச் செல்ல முயன்றபோது மேலும் 3 பேர் மோட்டார் வாகனங்களுடனும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் செலுத்தியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, இரவு விடுதியொன்றில் மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய சாரதி உட்பட அதில் பயணித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.