வாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி
வாரியபொல-கடுபொத பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸாரின் ஜீப் ரக வாகனத்துடன் மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.