பொகவந்தலாவ பகுதியில் 400 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை
பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்டப்பகுதியில் 400 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டு அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் (25) குறித்த பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்டப்பகுதியில் மாத்திரம் இதுவரையில் 16 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணபட்டுள்ளதோடு ஒரு உயிரிழப்பும் இடம்பெற்றுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.