பிரேசிலில் கொத்து கொத்தாக மடியும் கொரோனா நோயாளர்கள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.23 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 133,136,691 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 107,374,168 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28 இலட்சத்து 89 ஆயிரத்து 245 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 22,873,278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99,689 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 4,211 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,37 இலட்சமாக உயர்ந்துள்ளது.பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 82,869 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,106,058 ஆக உயர்ந்துள்ளது.