நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயம்
பிபிலை பகுதியில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, நானுஓயா ரதால குறுக்கு வீதிப் பகுதியில், லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்தனர்.
குறித்த வீதியில் பயணித்த பஸ், வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளான தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் 18 பேர் பயணித்துள்ளதாகவும், இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.