நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
- பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது ஆண்
- கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயது ஆண்
- கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 89 வயது பெண்