டுபாயில் கைது செய்யப்பட்ட ஐவர் நேற்றிரவு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹம்மட் மில்ஹான் உட்பட ஐந்து பேர் சி ஐ டியினரால் கொழும்பு கொண்டுவரப்பட்டனர்.
ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் மில்ஹான் உள்ளிட்ட அவர்கள் நாட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
அவர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.