கம்பஹா மாவட்டத்தில் பதிவான அதிகளவான கொரோனா நோயாளர்கள்
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 359 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
- கம்பஹா மாவட்டம்- 77 பேர்
- கொழும்பு மாவட்டம்- 74 பேர்
- காலி மாவட்டம்- 34 பேர்
- யாழ்ப்பாணம் மாவட்டம்- 17 பேர்
- குருநாகல் மாவட்டம்- 17 பேர்
இது தவிர வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 22 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவான மாவட்டங்கள்
- கொழும்பு மாவட்டம்- 30 ,255
- கம்பஹா மாவட்டம்-16, 919 பேர்
- களுத்துறை மாவட்டம்-6 ,283 பேர்
நாட்டில் இதுவரையில் 85 ,694 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 82 ,058 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான மூவாயிரத்து 134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை முப்படையினரின் கீழ் முன்னெடுத்து செல்லப்படும் 100 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,899 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் நேற்றைய தினம் 9 ,575 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.