அம்பாறையில் மீண்டும் மழைவீழ்ச்சி -மக்கள் அசௌகரியம் !
அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் மழைவீழ்ச்சி அதிகமாக பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலநிலையில் திடிரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகின்றது.
இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் மாலை வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளதுடன் சில பகுதிகளில் தாழ் நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளன.
கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி குறைவடைந்து காணப்பட்டது.
பாறுக் ஷிஹான்